TNPSC - General Knowledge - Economics - TAMIL GK 7

Latest

Thursday, 12 May 2016

TNPSC - General Knowledge - Economics

இந்திய பொருளாதார திட்டமிடுதலின் வரலாறு
* பொருளாதார திட்டமிடுதலை முதன் முதலில் கூறிய அறிஞர் - விஸ்வேஸ்வரய்யா
* தேசிய திட்ட கமிஷன் 1938 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு தலைமையில் உருவாக்கப்பட்டது.
* 1934 - ஆம் ஆண்டு இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதாரம் என்ற நூலை எழுதியவர்- விஸ்வேஸ்வரய்யா.
* 1944 - ஆம் ஆண்டு தேசிய திட்டமிடலில் முதன் முயற்சியாக 8 முன்னணி தொழில் அதிபர்களால் பொருளாதார முன்னேற்றத்திற்கான ஒரு திட்டம் என்ற நாடு முழுமைக்கான ஒரு திட்டம் உருவாக்கப்பட்டது. அதுவே பம்பாய் திட்டம் எனப்பட்டது.
* 1945 - காந்திய திட்டம் - ஸ்ரீமன் நாராயணன்
* 1950 - மக்கள் திட்டம் - M.N. ராய்
தேசிய திட்டக் குழு:
* தேசிய திட்டக்குழு மார்ச் 15, 1950 இல் தொடங்கப்பட்டது.
* திட்டக் குழுவின் முதல் தலைவர் - ஜவஹர்லால் நேரு.
* திட்டக்குழுவின் முதல் துணைத் தலைவர் - குல்சாரிலால் நந்தா.
* திட்டக் குழுவின் உறுப்பினர்கள் மத்திய அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்.
* திட்டகுழு அரசுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பு.
திட்டக் குழுவின் நோக்கம்:
* நாட்டின் பொருளாதாரம் மூலதனம் மனிதவளம் ஆகியவற்றை மதிப்பிடு செய்தல்
.
* செல்வங்களை ஆராய்ந்து அவற்றை ஒதுக்கீடு செய்தல்.
* செல்வங்களை ஆராய்ந்து அவற்றை ஒதுக்கீடு செய்தல்
* விவசாயம், தொழில்துறை, மின்சாரத் துறை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் பிற துறைகளில் வேகமான வளர்ச்சி.
* சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகளை நீக்குதல்.
தேசிய வளர்ச்சிக் குழு:
* தேசிய வளரச்சிக் குழு 15.08.1952 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
* தேசிய வளர்ச்சிக் குழு ஒரு சட்டப்பூர்வ அமைப்பு.
* தேசிய வளர்ச்சிக் குழுவின் உறுப்பினர்கள் - மத்திய அமைச்சர்கள், அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் மாநில முதல்வர்கள் மற்றும் மாநில நிதி அமைச்சர்கள்.
தேசிய வளர்ச்சி குழுவின் முக்கியப் பணி:
* ஐந்தாண்டு திட்டத்திற்கு இறுதி அங்கீகாரம் அளித்தல்.
மாநில திட்டக் குழு:
* மாநில திட்டக்குழுவின் தலைவர் மாநில முதல்வர்.
* மாநில திட்டக்குழுவின் உறுப்பினர்கள் மாநில நிதி அமைச்சர் மற்றும் பொருளாதார நிபுணர்கள்.
* ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் பொருளாதார முன்னேற்றம் காண 1928 ஆம் ஆண்டிலேயே முயன்ற முதல் நாடு சோவியத் ரஷ்யா.
முதல் ஐந்தாண்டுத் திட்டம்: 1951 - 1956
முதல் ஐந்தாண்டு திட்டத்தை வகுத்தவர் - ஹரோல்டு தோமர்
முக்கியத்துவம் தரப்பட்ட துறை விவசாயத்துறை.
சமூக முன்னேற்ற திட்டம் 1952-ல் தொடங்கப்பட்டது.
வேளாண்மை தவிர நீர்ப்பாசனம், மின் உற்பத்தி, போக்குவரத்து தொழில் துறைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.
முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் கட்டப்பட்ட முக்கிய அணைகள்:
தாமோதர் அணை, ஹிராகுட் எணை, பக்ராநங்கல் அணை, கோசி அணை, சாம்பல் அணை, நாகார்ஜூனா அணை, மயூராக்ஸி அணை போன்றவை.
இரண்டாவது ஐந்தாண்டு திட்டம்: 1956 - 1961
இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தை வகுத்தவர் P.G.மஹல நாபிஸ்.
முக்கியத்துவம் தரப்பட்ட துறை தொழில் துறை.
இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் தொடங்கப்பட்ட முக்கிய கனரக தொழிற்சாலைகள்:
* ரஷ்யா உதவியுடன் பிலாய் கனரக தொழிற்சாலை.
* பிரிட்டன் உதவியுடன் துர்காபூர் கனரக தொழிற்சாலை.
* ஜெர்மனி உதவியுடன் ரூர்கேலா கனரக தொழிற்சாலை.
* தசம முறையில் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.
* அணுசக்தி ஆணையம் ஹோமிபாபா தலைமையில் அமைக்கப்பட்டது.
மூன்றாவது ஐந்தாண்டு திட்டம்: 1961 - 1956
* மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தை வகுத்தவர் - P.G.மஹல நாபிஸ்.
* மூன்றாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம் தற்சார்பு திட்டமாகும்.
* பணமதிப்பு 36 சதவிகிதம் உயர்தல்
* சீனர் படையெடுப்பு, பாகிஸ்தான் போர், பஞ்சம் போன்ற காரணங்களால் மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் படுதோல்வி அடைந்தது.
ஆண்டுத் திட்டம்: 1966 - 1969
* இது திட்ட விடுமுறை காலமாகும்
* இக் காலக்கட்டத்தில் புசுமைப் புரட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.
* முக்கியத்துவம் தரப்பட்ட துறை, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் தொழில் துறை.
நான்காம் ஐந்தாண்டு திட்டம்: 1969 - 1974
* நான்காம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய குறிக்கோள், நிலையான வளர்ச்சி மற்றும் தன்னிறவை.
* பாகிஸ்தான் போருக்குப் பின், பங்காளதேஷ் அகதிகள் வருகை, பணவீக்கம் உயர்தல் போன்ற காரணத்தால் நான்காம் ஐந்தாண்டு திட்டம் தோல்வி அடைந்தது.
ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம்: 1974 - 1979
* ஐந்தாம் ஐந்தாண்டு திட்டத்தின் மறுபெயர் குறைந்தபட்ச தேவை திட்டம்.
* ஐந்தாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய குறிக்கோள் வறுமையை ஒழித்தல்.
* ஒர் ஆண்டுக்கு முன்பே நிறுத்திக் கொள்ளப்பட்ட திட்டமாகும்.
* இந்திராகாந்தி அவர்களால் இருபது அம்சத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது

No comments:

Post a Comment