TNPSC - General Tamil - 9th Standard - TAMIL GK 7

Latest

Sunday, 8 May 2016

TNPSC - General Tamil - 9th Standard

9-ஆம் வகுப்பு தமிழ் ( part 1 )
கடவுள் வாழ்த்து
உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அழகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே
- கம்பர்
சொற்பொருள்:
உளவாக்கல் – உண்டாக்குதல், படைத்தல்நீக்கல் – அழித்தல்
நீங்கலா – இடைவிடாது
அலகிலா – அளவற்ற
அன்னவர் – அத்தகைய இறைவர்சரண் – அடைக்கலம்
இலக்கண குறிப்பு:
யாவையும் – முற்றும்மை
ஆக்கல், நீக்கல், விளையாட்டு – தொழிற் பெயர்
அலகிலா – ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்
ஆசிரியர் குறிப்பு:
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள தேரழுந்தூரில் கம்பர் பிறந்தார்.
இவர் ஏர் எழுபது, சிலை எழுபது, சரஸ்வதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
இவர் குலோதுங்கச்சோழனின் அவைப் புலவராக விளங்கினார்.திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப்பட்டவர்.
கவிச்சக்ரவர்த்தி என்றும் கல்வியில் பெரியவர் கம்பர் என்றும் போற்றப்பட்டார்.
இவரின் காலம் கி.பி.பனிரெண்டாம் நூற்றாண்டு.
நூல் குறிப்பு:
வடமொழியில் வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணத்தைத் தழுவித் தமிழில் கம்பர் எழுதியதே கம்பராமாயணம்.
கம்பர் இந்நூலுக்கு இட்ட பெயர் = இராமாவதாரம்.
இது பால காண்டம், அயோத்திய காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என ஆறு காண்டங்களை உடையது.
திருக்குறள்
சொற்பொருள்:
அகழ்வாரை – தோண்டுபவரைதலை – சிறந்த பண்புபொறுத்தல் – பொறுத்துக்கொள்ளுதல்இறப்பு – துன்பம்இன்மை – வறுமைஒரால் – நீக்குதல்மடவார் – அறிவிலிகள்விருந்து – வீட்டிற்கு புதியவராய் வந்தவர்நிறை – சால்புஒறுத்தாரை – தண்டித்தவரைபோன்றும் – உலகம் அழியும்வரைநோநொந்து – துன்பத்திற்கு வருந்திமிக்கவை – தீங்குகள்தகுதியான் – பொறுமையால்துறந்தார் – பற்றற்றவர்இன்னா – தீய
இலக்கான குறிப்பு:
பொறுத்தல் – தொழிற்பெயர்அகல்வார், இகழ்வார் – வினையாலணையும் பெயர்மறத்தல், பொறுத்தல் – தொழிற்பெயர்நன்று – குறிப்பு வினைமுற்றுவிருந்து – பண்பாகு பெயர்ஒரால், நீக்குதல் – தொழிற்பெயர்நீங்காமை – எதிர்மறைத் தொழிற்பெயர்ஒருத்தார் – வினையாலணையும் பெயர்பொதிந்து – வினையெச்சம்வையார் – வினைமுற்றுஒருத்தார், பொறுத்தார் – வினையாலணையும் பெயர்தற்பிறர் – ஏழாம் வேற்றுமைத் தொகைசெய்யினும் – இழிவு சிறப்பும்மைநொந்து – வினையெச்சம்அரண், திறன் – ஈற்றுப்போலிகள்விடல் – அல் ஈற்று வியங்கோள் வினைமுற்றுஇறந்தார் – வினையாலணையும் பெயர்உண்ணாது – வினையெச்சம்
ஆசிரியர் குறிப்பு:
இவர் நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகனார், மாதானுபாங்கி, பெருநாவலர் என்னும் சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுவார்.இவரின் காலம் கி.மு.31ஆம் நூற்றாண்டு என்று கூறுவர்.
நூல் குறிப்பு:
திரு + குறள் = திருக்குறள்திரு = செல்வம், சிறப்பு, அழகு, மேன்மை, தெய்வத்தன்மை எனப் பல பொருள் உண்டு.குறள் = குறுகிய அடி உடையது.இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என முப்பெரும் பிரிவுகளை கொண்டது.அறம் 38 அதிகாரங்களாகவும், பொருள் 70 அதிகாரங்களாகவும், இன்பம் 25 அதிகாரங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.இந்நூலை போற்றிப் பாராட்டிய பாடல்களின் தொகுப்பே திருவள்ளுவ மாலை.

No comments:

Post a Comment